புதிய படத்தில் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்.. கோடிகளில் கொட்டும் சம்பளம்..

பாகுபலி படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்த படத்தை பிரமாண்டமாக வழங்க எண்ணினார். பிரபாஸ் நடிக்கும் 20வது படமாக ராதே ஷியாம் உருவாகிறது, இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் டைரக்ட் செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. பிரபாஸ் நடிக்கும்21 படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் அந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். ஏற்கனவே கோச்சடையான் படம் மூலம் தமிழில் நடித்த தீபிகா படுகோனே பிரபாஸ் 21 மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். நாக் அஸ்வின் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர், இப்படம் கீர்த்திக்குத் தேசிய விருது பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா சேர்ந்து நடிப்பதால் இப்படத்துக்கு அதிக எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் பிரபல நடிகைகள் தென்னிந்தியப் படங்களில் நடிப்பதைத் தவிர்க்கின்றனர். பாலிவுட் அளவுக்குச் சம்பளம் கிடைக்காது என்பது அதற்கு ஒரு காரணம். தற்போது கங்கனா நடிக்கும் தலைவி படத்துக்கு அவருக்கு 28 கோடி சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு படத்தில் நடிக்க வரும் தீபிகாவுக்கு கங்கனாவை விட அதிக சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது தென்னிந்திய நடிகைகள் ஒரு சிலர் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் அதெல்லாவற்றையும் விடப் பல மடங்கு தீபிகாவுக்குச் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அது கடந்த 3 வருடமாக நிறைவேறாத ஆசையாகவே ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.

More News >>