மத்தியப் பிரதேச கவர்னர் மறைவு.. ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..

மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேச மாநில கவர்னராக லால்ஜி தாண்டன்(85) இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் இன்று காலை காலமானார் என்று அவரது மகன் அசுதோஷ் அறிவித்துள்ளார்.லால்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோவிந்த் வெளியிட்ட செய்தியில், ஒரு சிறந்த தலைவரை நாம் இழந்து விட்டோம். தேசிய அளவில் சிறப்பாகச் செயல்பட்ட அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், லால்ஜி தாண்டன் திறமையான நிர்வாகி. பொது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வளர்ச்சியில் லால்ஜி தாண்டனின் பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

More News >>