கொரோனா ஊரடங்கில் சொகுசு காரில் ரஜினி நகர்வலம்..

கொரோனா ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமையில் ஃபுல் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டாலும் மற்ற நாட்களில் அவசர வேலையாக செல்பவர்கள், அலுவலகத்துக்குச் செல்பவர்கள் சாலைகளில் விரைகின்றனர். லாக் டவுனில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் நாட்டு நடப்புகளை அறிந்து அதற்கேற்ப தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்குகிறார். கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. கொரோனா தடை முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருந்தாலும் தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள் நலன் கருதிப் படப்பிடிப்பை இன்னும் சில மாதங்கள் தள்ளி வைக்கலாம் என்று ரஜினி தரப்பு ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி சொகுசு காரான லம்போனிகியில் மாஸ்க் அணிந்தபடி அவரே காரை ஒட்டிச் செல்வது போன்ற புகைப்படம் நெட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினி எதற்காகச் சென்றார் என்பது பற்றி தெரியவில்லை. ஒருவேலை அவர் தனது நண்பர்கள் யாரையாவது பார்க்கச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தையடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. அதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>