டிவிட்டரில் பிளாக் செய்த வனிதாவை நக்கலடித்த கஸ்தூரி.. சிங்கப்பெண்ணே.. பயந்துட்டுயா குமாரு..?

நடிகைகள் வனிதா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மூவரும் நேற்று இணைய தளத்தில் மோதிக்கொண்டது பரபரக்க வைத்தது. குழாயடி சண்டை என்று அவர்களே தங்களது சண்டையை வர்ணித்தனர். அவர்கள் மூவரின் சண்டையில் வனிதாவும் லட்சுமியும் மோதிக்கொண்டது நெட்டில் வடிவேலு கவுண்டமணி. செந்தில் காமெடியுடன் கலந்து விட்டு மீம்ஸ் போட்டு நெட்டிஸன்கள் தெறிக்க விட்டனர்.இன்றைக்கு அடுத்த எபிசோட் போல் வனிதாவைக் கழுவி ஊற்றியிருக்கிறார் கஸ்தூரி.

நேற்று நடந்த சண்டையில் லட்சுமி ராமகிருஷ்ணை திட்டிய வனிதாவின் பேச்சைக் கேட்டு இதயத்தில் ரத்தம் கசிந்ததாகக் கூறிய கஸ்தூரி, உனக்கு 1,2,3 என வரிசையாக மெகா தொடர் போல் வாழ்க்கை உள்ளது. அதில் உள்ள எல்லாவற்றையும் நெட்டிலும் யூ டியூபிலுமாக நாறிக் கொண்டிருக்கிறது என்று வனிதாவைச் சகட்டு மேனிக்குத் திட்டி தீர்த்தார் கஸ்தூரி. இதையடுத்து கஸ்தூரியை காமெடி பீஸ் என்று கூறிய வனிதா அவரை தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து பிளாக் (தடை) செய்தார். அதற்குக் கஸ்தூரி பதிலடி தந்திருக்கிறார்.

வனிதா தன்னை பிளாக் செய்த டிவிட்டரை எடுத்துப் பகிர்ந்த கஸ்தூரி, பயதுட்டியா குமாரு? மற்றவர்களைத் தூண்டுவது யார் என்பது இந்த உலகம் நன்கு அறியும். அவர்கள் திருப்பி அடித்தால், அவர்களைத் திட்டிவிட்டு ஓட்டம் பிடிக்கிறாய், சிங்கப்பெண்ணே.. இந்த நிமிடம் வரை நான் உன்னுடைய வாழ்க்கை தேர்வைப் பற்றி கேள்வி கேட்கவில்லை ஆனால் உன்னுடைய பொது நடவடிக்கைகளைப் பற்றித் தான் கேட்டிருக்கிறேன். உன்னைச் சுற்றியிருக்கும் எல்லா நல்லவர்களையும் பிளாக் செய்துவிடு. நீ நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவரையும் பிளாக் செய்துவிடு. ஏமாற்றுபவர்களை மட்டும் அருகில் வைத்துக்கொள் எனத் தெரிவித்திருக்கிறார். இது பரபரப்பாகி இருக்கிறது.

More News >>