விஜய் மகன் ஒரு வழியாக லண்டனிருந்து வீடு திரும்பினார்.. ஷங்கர் இயக்கத்தில் ஹீரோவாகிறார்?

தளபதி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றிப் படித்து வந்தார். கடந்த 2 வாரத்துக்கு முன் அவரது படிப்பு நிறைவுக்கு வந்ததையடுத்து உடன் படித்த மாணவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஜேசன் சென்னை திரும்ப முடியவில்லை. அவர் அங்குள்ள உறவினர் வீட்டிலேயே தங்கி இருந்தார். இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விமானங்கள் இயங்கத் துவங்கின. இதையடுத்து ஜேசன் சென்னை திரும்பினார்.சென்னை திரும்பிய ஜேசன் 14 நாட்கள் நட்சத்திர ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். 14 நாட்கள் முடிந்த நிலையில் அவர் வீடு திரும்பினார். அவரை குடும்பத்தினர் வரவேற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஜேசன் சஞ்சய் சினிமா துறை பற்றிப் படித்திருப்பதால் அத்துறையில் ஈடுபடும் எண்ணத்துடனே இருக்கிறார். நடிப்பில் ஈடுபடுவாரா அல்லது டைரக்‌ஷனில் ஈடுபடுவாரா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் ஷங்கர் இயக்கத்தில் நடிகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று விஜய் தரப்பு ஆசைப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜேசனை நான் தான் எனது படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துவேன் என்று ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்யிடம் சொல்லி வைத்திருக்கிறார். ஆனால் ஜேசன் சஞ்சய் நடிக்க வருவாரா? படம் இயக்குவாரா? என்பது பற்றி பிறகு தான் தெரிய வருமாம். விஜய்யைப் பொறுத்தவரை அவர் நடித்திருக்கும் மாஸ்டர் படம் கொரோனா முடிந்த பிறகு திரைக்கு வரவுள்ளது. அடுத்த ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>