கந்தசஷ்டி கவசம் விமர்சனம் :ரஜினி கடும் கண்டனம்.. கந்தனுக்கு அரோகரா போட்டு விளாசல்..

முருகர் பற்றிய கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற யூ டியூபில் அவதூறாக விமர்சனம் செய்தனர் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கிடையில் கருப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்தாக சிலர் புகார் கூறினார்கள். அதற்கு திமுக கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததுடன் திமுகவில் 1கோடி இந்துக்கள் உள்ளனர். திமுக மீது அவதூரை பரப்ப இப்படி எதிர்க்கட்சியினர் சதி செய்கின்றனர் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை போலீஸ் கைது செய்தது. இரண்டு நாட்களாக இப்பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பா ஜ கட்சி மாநில தலைவர் எல். முருகன் இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.இந்நிலையில் ரஜினிகாந்த் இது குறித்து இன்று கருத்து வெளியிட்டிருக்கிறார். அவர் கூறியதாவது: கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்துச் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காகத் தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா'இவ்வாறு ரஜினி டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News >>