வனிதாவை துரத்தும் சர்ச்சை விஷயங்கள்.. வேகமெடுக்கும் 3வது திருமண விவகாரம்..

நடிகை வனிதா கடந்த சில நாட்களாகவே இணைய தளத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியிருக்கிறார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துகொண்டார். இது தான் சர்ச்சைக்குக் காரணம், பீட்டர் பால் தனது முதல் மனைவியிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதாவைத் திருமணம் செய்துகொண்டது பற்றி நடிகைகள் லட்சுமி ராம கிருஷ்ணன், கஸ்தூரி இருவரும் விமர்சனம் செய்தனர். இதனால் அவர்கள் இருவருடனும் மோதினார் வனிதா. உச்சக்கட்டமாக வீடியோ சந்திப்பில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசி அவமானப்படுத்தினார் வனிதா. அந்த விவகாரம் மற்றொரு சர்ச்சையாகி இருக்கும் நிலையில், நடிகை நயன்தாரா, பிரபு தேவா இருவரும் உறவிலிருந்ததை பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் தைரியம் இல்லையா? என்று கேட்டார்.

இந்நிலையில் திடீரென்று டிவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார் வனிதா. அதற்கு நயன்தாரா பற்றி அவர் எழுப்பிய சர்ச்சைதான் காரணம் எனக் கூறப்படுகிறது. நயன்தாரா ரசிகர்கள் வனிதாவை தாறுமாறாக விமர்சிக்கத் தொடங்கியதுடன் நயன்தாராவிடம் வனிதா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஹேஷ் டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர்.வனிதா இரண்டு நாட்களாக வாய் மூடி பேசாமல் இருக்கும் நிலையில் அவரது பழைய விஷயங்களைச் சிலர் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். தற்போது இணைய தளத்தில் நபர் ஒருவருடன் கையில் கோப்பையுடன் அவர் மீது வனிதா சாய்ந்தபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வனிதாவுடன் இருப்பது யார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.வனிதா பலரையும் எடுத்தெறிந்து பேசி வரும் நிலையில் அவரது பழைய விவகாரங்களைத் தேடித் தேடி சிலர் வெளி யிடத் தொடங்கி உள்ளனர். இது தவிர வனிதா, பீட்டர்பால் இருவர் மீதும் போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது. இதுபோன்ற சர்ச்சைகள் வனிதாவைத் துரத்த ஆரம்பித்திருக்கின்றன.

More News >>