காட்டுக்குள் தன்னையே தேடி சென்ற பிரபல நடிகை..

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், மற்ற நடிகர்களைப் போலவே, தமன்னாவும் பெரும்பாலும் மும்பையில் உள்ள தனது இல்லத்திலேயே முடங்கிக் கிடக்கிறார், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லாக் டவுன் தன்னை சமையல் நிபுணராக மாற்றியிருக்கிறது என்றார்.வீட்டில் முடங்கி போரடித்த நிலையில் லாக்டவுன் தளர்வில் தோளில் பையை மாட்டிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு இயற்கையை ரசிக்க புறப்பட்டார். அவருடன் நண்பர் ஒருவரும் சென்றார்.

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் அமைந்துள்ள பிரபலமான மலையேற்ற இடமான அசங்கான் மஹூலி கோட்டையை நோக்கி சென்ற தமன்னா அங்கு பல மணி நேரம் செலவிட்டு இயற்கையை ரசித்தார். இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு பசுமையான காடு வழியாக தனது மலையேற்றத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். இயற்கையோடு இயற்கையாக மாறி உங்களை அத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே கண்டு பிடிப்பீர்கள் என குறிப்பிட்டிருகிறார் தமன்னா.தமன்னா புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாத நிலையில் சீட்டிமார் தெலுங்கு படத்திலும் போல் சுடியான் என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். அப்படங்கள் இறுதி கட்டத்தில் உள்ளது.

More News >>