வனிதாவை விமர்சித்த சூர்யா தேவி கைதா? பரபரப்பு வீடியோ..

நடிகை வனிதா பீட்டர் பாலை மணந்தார். வனிதா திருமணம் பற்றி சூர்யா தேவி பற்றி விமர்சித்தார்.இது குறித்து விருகம்பாக்கம் போலீஸில் வனிதா புகார் அளித்தார். அதில் தனது திருமணம் பற்றி சூரியா தேவி தரக்குறைவாக விமர்சிக்கிறார், அவர் போதைப் பொருள் விற்கிறார். தனது தவற்றை மறைக்க என்னை விமர்சித்து எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து வனிதா மீது சூரியாதேவி, நடிகை வனிதா மீது வடபழனி போலீசில் புகார் அளித்தார். என் மீது தவறான குற்றச்சாட்டுச் சுமத்தி திருந்தார். இரண்டு தினங்களுக்கு முன் போலீஸார் முன்னிலையில் இவர்களுக்குள் சமரச பேச்சு மேற்கொள்ளப்பட்டது. அதில் சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று சூர்யா தேவியை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. விசாரணை முடிந்ததும் திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று அழைத்துச் செல்லப்பட்டவர் விடிந்தும் வீடு திரும்பவில்லையாம். அவரது இரண்டு குழந்தைகள் வீட்டில் அழுத படி இருக்கும் வீடியோ சூர்யாதேவின் இணைய தள பக்கத்தில் வெளியானது, இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த வீடியோ அவரது இணைய தள பக்கத்திலிருந்து நீக்கப் பட்டிருக்கிறது.

More News >>