கொரோனா காலத்தில் வைரலாகும் நடிகையின் வளைகாப்பு.. நீலாம்பரியின் ரகளை..
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்திருப்பதுடன் டிவி சிரீயலில் நடிக்கிறார். படையப்பா படத்தில் நீலாம்பரி வேடம் ஏற்றுக் கலக்கியவர் பின்னர் பாகுபலி படத்தில் மகாராணியாக நடித்தார். இதையடுத்து ஜெயலலிதா வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட வெப் சீரியலில் நடித்தார். இதைக் கவுதம் மேனன் இயக்கினார்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது இணைய தள பக்கத்தில் தனது வளைகாப்பு படத்தைப் பகிர்ந்திருக்கிறார். திடீரென்று அவர் வளைகாப்பு படம் பகிர்ந்ததும் கர்ப்பமா சொல்லவே இல்லையே என்று சிலர் ஜோக் செய்தனர். ஆனால் அது பழைய வளைகாப்பு படம் என்பதை ரம்யா விளக்கினார். தான் வெளியிட்ட வளைகாப்பு படத்தில் தனக்கு வளையல் போடுவது தன்னுடைய 2 பெரியம்மாக்கள். அதைப் படம் எடுத்தவர் எனது அம்மா எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது 2 பெரியம்மாக்களும் காலமாகிவிட்டார்களாம்.ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியைத் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.