பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி..

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடக்கிறது. கன்னட நடிகை ஜெயஸ்ரீ. இவர் உப்பு ஹுலி கிஹர படத்தின் மூலம் கன்னட படத்தில் அறிமுகமானார். பல கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அத்துடன் மாடல் அழகியாகவும் இருக்கிறார். கன்னட பிக்பாஸ்3ல் கலந்து கொண்டு பிரபலம் ஆனார் ஜெயஸ்ரீ. இவர் பேஸ்புக்கில் திடீரென்று ஒரு மெசேஜ் வெளியிட்டர். அதில், நான் போகிறேன். குட்பை, இந்த முட்டாள் தனமான உலகத்திலிருந்து. எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாகத் தகவல் பரவியது.ஏராளமானவர்கள் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவசரப்பட்டு எந்த தவறான முடிவும் எடுக்க வேண்டாம் என்றனர். சில மணி நேரத்துக்குப் பிறகு தான் வெளியிட்ட பதிவை ஜெயஸ்ரீ நீக்கினார். அத்துடன் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். லவ் யூ ஆல் என புதிய மெசேஜ் வெளியிட்டார். அதைக்கண்டு அவரது தோழி நடிகை அத்விதி ஷெட்டி.உறுதியாக இரு. நீ தைரியமான பெண் என்பது எனக்குத் தெரியும். நீ சாதிப்பாய். உனக்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். நிறையக் கட்டி அணைப்புகள். லவ் யூ ஜெயஸ்ரீ எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில காலமாக ஜெயஸ்ரீ ,மன அழுத்தத்தில் இருந்தார். அவருக்கு குடும்ப பிரச்சனை இருந்தது. வேலை இல்லாமல் இருந்ததும் அதற்கு காரணம். கடந்த 4 மாதத்துக்கு முன் ஜெயஸ்ரீ தனது புதிய வீட்டுக்குக் குடி சென்றார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினருடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் தற்கொலை எண்ணத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

More News >>