எனக்கு கொரோனா குணமாகவில்லை அமிதாப் அறிவிப்பு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ம் தேதி இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து உடனடியாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய், குழந்தை ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்கள் ஒவ்வொரு வரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஓரிரு நாளில் அமிதாப் வீடு திரும்புவார் என்றும் கூறினார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் அதாவது தொற்று இல்லை என்று தெரியவந்ததாகவும் அவர் சீக்கிரம் வீடு திரும்புவார் என்று வடநாட்டு டிவி சேனல் செய்தி வெளியிட்டது. ஆனால் இதனை அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுத்திருக்கிறார். “இது தவறான செய்தி, பொறுப்பற்றது, போலியானது, மாற்றமுடியாத பொய்” என்று கூறியுள்ளார்.கொரோனாவிலிருந்து அமிதாப் குணம் அடைந்தார் என்ற தகவல் வந்ததும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதை அமிதாப்பே மறுத்ததையடுத்து அவர்கள் சோகமானார்கள்.

More News >>