பிரபல நடிகைகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக கூறியவர் திடீர் கைது..

பிரபல நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் அவ்வப்போது மலைப்பகுதிக்குச் சென்று டிரெக்கிங் செய்கிறார். தெலுங்கில் 'தட்ஸ் இஸ் மஹாலட்சுமி', 'சீட்டிமார்' மற்றும் இந்தியில் 'போலே சுடியன்' நடித்து வருகிறார். தற்போதைக்கு தமிழில் அவருக்குக் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீராமோஜு சுனிஷித் என்பவர் தெலுங்கு யூடியூபில் தனக்கு தமன்னாவுடன் உறவு இருப்பதாகக் கூறினார், பின்னர் அந்த உறவை முறித்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.

நடிகை லாவண்யா தமிழில் சசிகுமார்க்கு ஜோடியாக 'பிரம்மன்', சந்தீப் கிஷனுடன் 'மாயவன்' படத்தில் நடித்ததுடன், அதர்வாவுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதியையும் ஸ்ரீராமோஜு விடவில்லை. லாவண்யா திரிபாதியைத் திருமணம் செய்து கொண்டேன். அவர் மூன்று முறை கர்ப்பமாகிக் கருக்கலைப்பு செய்ததாகவும் அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து லாவண்யா திரிபாதி போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஸ்ரீராமோஜு சுனிஷித் என்பவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். ஸ்ரீராமோஜு சுனிஷித் இதுபோல் பல கட்டுக்கதைகளைத் தனது யூடியூபில் அவிழ்த்துவிட்டுள்ளார். 'சாஹோ' மற்றும் '1-நேனோகாடின்' போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது.ஆனால் பிரபாஸ் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த படங்களை பறித்து விட்டனர் என்றும், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, பவன் கல்யாண் மற்றும் பிறருக்கு தான் பிற படங்களை விட்டுக் கொடுப்பதாகக் கூறியிருந்தார் ஸ்ரீராமோஜு சுனிஷித்.

More News >>