மதுரையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் தாண்டியது.. மாவட்டங்களில் பரவுகிறது..

தமிழகத்தில் கொரோனா பரவுவது கட்டுப்படவில்லை. நேற்றும் 6993 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது.சீன வைரஸ் நோயானா கொரோனா, இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று(ஜூலை27) ஒரே நாளில் 6993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 37 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 20,716 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5723 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 62,342 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 77 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்தது.சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1138 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 95,857 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 448 பேருக்கும், காஞ்சிபுரம் 362, மதுரை 249, திருவள்ளூர் 474 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 12,717 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,057 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 12,320 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கோவை, ராமநாதபுரம், சேலம், நெல்லை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதுமே தற்போது கொரோனா பரவி வருகிறது. இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 20 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 54,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More News >>