வீட்டில் சூதாட்டம்..பிரபல தமிழ் நடிகரை கைது செய்த போலீஸ்...!

நடிகர் ஷாம் ஹீரோவாக நடித்து பின்னர் வில்லனாகவும், இரண்டாவது ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். 12 பி படத்தில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகு ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, அன்பே அன்மே,லேசா லேசா, இயற்கை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். தற்போது காவியன் என்ற படத்தில் மீண்டும் தன்னை ஹீரோவாக நிலை நிறுத்தும் வகையில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தைச் சாரதி இயக்குகிறார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். நடிகர் ஷாமும் வீட்டில் இருக்கிறார். அவருக்குச் சொந்தமான வீடு சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது. அவரது வீட்டில் பணம் வைத்துச் சூதாடுவதாக போலீஸுக்கு தகவல் வந்தது. நேற்று இரவு அவரது வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஷாம் உள்ளிட்ட 13 பேர் சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து பணம், சீட்டுக்கட்டுகளையும் மற்றும் பணத்துக்கு மாற்றாக பயன்படும் டோக்கன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். ஷாம் தனது வீட்டை சிட்டாட்ட கிளப்போல் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தொழில் அதிபர்கள். சில நடிகர்களும் பொழுது போக்கிற்கு அங்கு வந்து விளையாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

More News >>