சர்ச்சுக்குள் அடாவடியாக நுழைந்து பைபிளை எரித்த இந்து வெறியர்கள்!

மதுரையில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு இந்துத்துவ வெறியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் பைபிள்களை எரித்துச் சென்றுள்ளனர்.

மதுரை-அலங்காநல்லூர் சாலையில் உள்ள சிக்கந்தர்சாவடி, சதங்கை கலை மையம் அருகிலுள்ள சர்ச் மற்றும் கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச்களுக்கு ஞாயிறன்று ஐம்பது பேர் கொண்ட இந்துத்துவ வெறிக்கும்பல் ஒன்று சென்றுள்ளது.

இனிமேல் நீங்கள் யாரும் சர்ச் நடத்தக்கூடாது. அடுத்த வாரம் சர்ச் நடத்தினால் உங்களை எல்லாம் இங்கிருந்து விரட்டியடிப்போம் என அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. மேலும், சர்ச்சில் உள்ள மைக் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து நாசப்படுத்தியதோடு, சுமார் 30 பைபிள்களை எரித்துள்ளனர். மேலும், இந்துத்துவ வெறியர் நடத்திய தாக்குதல்களில், காயமடைந்த பெர்ஷியா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சதங்கை கலைமையம் அருகிலுள்ள சர்ச், கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச்சுகளுக்கும் அந்த கும்பல் சென்றுள்ளது. அங்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தி, அடுத்த வாரம் முதல் சர்ச் நடத்தக்கூடாது. சர்ச் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும், சர்ச்களை கொளுத்திவிடுவோம் என எச்சரித்துள்ளது.

இது குறித்து கிறிஸ்தவ மத போதகர்கள் மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியும், அவர்களை மிரட்டியும் சென்றுள்ளது கிறிஸ்தவ மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>