பிரபல நடிகரிடம் உதவி கேட்கும் வனிதாவிடம் மோதிய சூரியா தேவி.. வீட்டு கதவை அடைத்துவிட்டார்கள்..

நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணத்தை விமர்சித்த நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி, டைரக்டர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகர் வனிதா போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சூரியா தேவியை போலீஸார் கைது செய்தனர். பிறகு அவர் ஜானீனில் வெளியில் வந்தார். சில தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. சில தினங்களாக அமைதியாக இருந்த சூரியா தேவி திடீரென்று யூடியூபில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தனக்கு முன் ஜாமின் பெற்றுத் தரும் படி பிரபல நடிகரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:அண்ணா வணக்கம், எஸ்வி,சேகரண்ணா நீங்களும் நானும் .மீட் பண்ணியிருக்கோம்.ஞாபகமிருக்காண்ணா. ரெண்டு வருஷத்துக்கு முன்னால தமிழிசை சவுந்தரராஜன் அக்காவை நான் ரொம்ப ஆபாசமா பேசினேன்னு சொல்லி எனக்குத் தண்டனை கொடுத்தாங்க.. தண்டனை அனுபவிச்சுட்டு உள்ள போயிட்டு வெளிய வந்துடேன். வந்த பிறகு நான் கையெழுத்து போட்டுட்டு இருக்கும் போது தான் உங்களைப் பார்த்தேன் ஒரு பிரச்சனையில கோர்ட்ல ஒரு வழக்குல உங்களுக்கு மட்டும் முன் ஜாமின் கொடுத்தாங்க. உங்களுக்கு மட்டும் சீக்கிரம் கொடுத்துட்டாங்க எனக்கு ஜாமினே கொடுக்கல.

பெரிய லெவல்ல என்னய பிடிச்சுப் போட்டுட்டாங்க. நான் ஒரு சாதாரண பொண்ணு.. இப்ப பாருங்க.. உங்களுக்கு அப்பதான் தெரிஞ்சிருக்கும் என்னோட பேக்கிரவுண்டெல்லாம் என்னன்னு. நீங்க ஒரு நாடகத்துல வனிதா அக்காவுக்கு நெருக்கமா மெட்டி போட்டீங்க அதெல்லாம் தப்பு கிடையாது.நானும் அவனும் (நாஞ்சில் விஜயன்) போட்டோவுல கையில் வாச்சிருக்கறது ஜூஸின்னு தெரியலாம் , சரக்குன்னு தெரியலாம் . நீங்க செலபிரிட்டியா இருந்து போட்டோ எடுத்தா தப்பு கெடயாது. நான் ஒரு சாதாரண பொண்ணா செலப்ரட்டியா இருந்த அந்த பையனோட போட்டா எடுத்தா ரொம்ப பெரிய தப்பு. அவனுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலண்ணா. இது எந்த விதத்துல நியாயம் சொல்லுங்க.

உங்கல எனக்கு தெரியும் நான் பாத்திருக்கேன்.. .அண்ணா, உங்களை நான் கோர்ட்ல பார்த்திருக்கேன். நீங்க வரும்போது 10, 15 வக்கீலோட வந்தீங்களா அப்பவே எனக்குத் தெரியும் நீங்க பெரிய ஆளுன்னு.. எனக்கு முன் ஜாமின் வேணும்.. என்னய கூட நீங்க பாத்தீங்க எனக்கு இந்த ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணிக் கொடுங்கண்ணா, உங்களை என் அண்ணனா நெனைச்சு கேட்கிறேன். என் வீட்டு வாசலை அடைச்சுட்டாங்க பிளீஸ்னா.. என்னால வீட்டுக்கும் போக முடியலை.. என் வீட்டைப் பார்த்தீங்கன்னா தெரியும்.

தமிழ் நாட்டுலயே சூரியாதேவி வீட்டை மட்டும் வாசலையே அடைச்சுட்டாங்கண்ணா.. பார்த்தீங்களா, எவ்வளவு பெரிய கொரோனான்னு. என் வீட்டை எப்படி அடைச்சு வச்சிருக்காங்கன்னு பாருங்க.. எனக்கு முன் ஜாமின் வேணும்.. எனக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க.. எனக்காக இந்த உதவி மட்டும் பண்ணிக் கொடுங்கண்ணா.

இவ்வாறு சூரியாதேவி வீடியோவில் கூறியுள்ளார்.

முழு வீடியோ பார்க்க:https://youtu.be/dur4fyNtQ-Y

More News >>