ஜி.எஸ்.டி-யைத் தூக்கிக் குப்பையில்தான் போட வேண்டும்!- கமல் ஆவேசம்

"ஜி.எஸ்.டி-யைத் தூக்கிக் குப்பையில்தான் போட வேண்டும்" என மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் தனது 'மக்கள் நீதி மய்யம்' மூலம் கொடுத்த அரசியல் பிரவேசத்தின் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் மக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகளின் குறையை எடுத்துக்கூறியும் வருகிறார். கமல் தற்போது தனது ஈரோடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் உள்ளார். அங்கு நேற்று கோபிச்செட்டிபாளையத்தில் ஒரு கூட்டத்தில் கமல் மக்கள் மத்தியில் பேசினார்.

கமல் பேசுகையில், "இளைஞர்கள் பொறியியல், மருத்துவம் என இனிமேலும் ஓடாமல் விவசாயம் பக்கம் திரும்ப வேண்டும். விளை நிலங்கள் பல இளைஞர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறது. அரசுக்காகக் காத்திராமல் மக்கள் களத்தில் இறங்க வேண்டும்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு நல்ல திட்டம் தான். ஆனால், அது சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மதுவிலக்கு என்பது அனைத்து சாரரும் ஒன்றிணையும் வரையில் நடக்காது" எனக் கூறினார்.

மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com

More News >>