குடிபோதையில் மாணவர்களுடன் தகராறு - கிரிக்கெட் வீரருக்கு சிறை!

இலங்கை டி-20 போட்டி வீரர் ரமித் ரம்பக்வெல்லா குடிபோதையில் பல்கலைகழக மாணவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரமித் ரம்பக்வெல்லா [வயது 26] இலங்கை டி20 கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். கொழும்பு நகரில் உள்ள பிரபல இரவு விடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார். தனது இருப்பிடத்திற்கு திரும்பும் வழியில் குடிபோதையில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் தகராறு செய்தது மட்டுமல்லாமல், அவர்களை கொடூரமாக அடித்து உதைத்துள்ளார்.

இது தொடர்பாக புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் ரமித் ரம்பக்வெல்லா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால், அணியுடனான வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படலாம் என இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக ரமித் ரம்பக்வெல்லா 19வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்று விளையாடிய போதும், தகாத செயல்களில் ஈடுபட்டார் என்று கூறி கொழும்பில் உள்ள நாவல வீதியில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>