87வது பிறந்த தினம்.. முரசொலி மாறன் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவிப்பு..

மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும், நீண்ட காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியவருமான மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள மாறன் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மற்றும் எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதே போல், மாவட்டங்களில் உள்ள திமுக அலுவலகங்களில் முரசொலி மாறன் படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

More News >>