கமலின் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்க மறுத்த பிரபல நடிகை..

கமல்ஹாசன் வருடா வருடம் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் பெரிய நட்சத்திரங்கள் பங்கேற்காவிட்டாலும் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் கலந்துகொள்கின்றனர். 100 நாள் ஒரே வீட்டில் அவர்கள் தங்கி இருக்கும் போது மோதல், காதல், அழுகை, சோகம் எனப் பலவித பரிமாணங்களில் தங்களை வெளிப்படுத்துகின்றனர். ஒருமுறை நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பானது.

வாரத்துக்கு ஒரு முறை கமல்ஹாசன் அவர்களிடம் பேசி சண்டைகளைத் தீர்த்து வைப்பது, குற்றங்களைக் கண்டிப்பது எனச் செயல்படுகிறார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் 4 ஷோ கொரோனா பாதிப்பால் நடக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முதல் ஷோவை தொடங்க திட்டமிட்டிருக்கின்றனர். தெலுங்கிலும் இந்த ஷோ நடத்தப்படுகிறது, அநேகமாக நாகார்ஜூனா இம்முறை தொகுப்பாளராக இருப்பார் என்று தெரிகிறது.

தமிழில் பிக்பாஸ் 4 ஷோவுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன. நடிகர் இர்பான் , நடிகைகள் சுனைனா , அதுல்யா ரவி, கிரண் ரதோட் , ரம்யா பாண்டியன் , வித்யூ லேகா ராமன் போன்றவர்கள் தேர்வாகி இருப்பதாகத் தெரிகிறது. சுனைனா பங்கேற்கிறார் என்ற தகவலை அவர் மறுத்திருக்கிறார்.ரியாலிட்டி ஷோவுக்கு நான் சென்றால் என் படங்களை யார் முடிப்பது.? ஒருபோதும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன். நன்றி எனத் தெரிவித்திருக்கிறார் சுனைனா.

More News >>