டெல்லியில் கனமழை.. சாலைகளில் வெள்ளம்..

டெல்லியில் கனமழையால், சாலைகளில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.டெல்லி, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, அரியானாவின் குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

இதனால், டெல்லியின் சில பகுதிகளிலும், குருகிராம் பகுதிகளிலும் சாலைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வயர்கள் அறுந்து விழுந்திருக்கலாம் என்பதால், வெள்ளப் பகுதிகளில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய்ப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கச் சுகாதாரமாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.வடமாநிலங்களில் மேலும் 24 மணி நேரத்திற்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More News >>