இறைவா என் ஆயுளையும் சேர்த்து எஸ்பிபிக்கு கொடு.. சரோஜாதேவி உருக்கம்..

சூப்பர் ஸ்டார்கள் எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஏராளமான நடிகர்களுடன் அந்த காலத்தில் ஜோடியாக நடித்தவர் சீனியர் நடிகை சரோஜாதேவி.பாடகர் எஸ்பி பி குணமடைய வேண்டிக் கூறியதாவது:பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்கத் தேன் சாப்பிடுவீங்களா?னு கேட்டேன். ஏன் அப்படி கேட்கிறீங் கன்னு கேட்டார். இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குதுன்னு சொன்னேன். அதற்கு அவர் ஏன் நீங்களும் தான் அழகாக இருக்கீங்கனு சொன்னார்.

அவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதை பார்த்து இந்தியாவே கவலைப் படுது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்குக் கொடு எனக் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்ல படியாகக் குணமடைந்து மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும் இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார்.

More News >>