ஆதார் விவகாரம்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆதார் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் ஆதார் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. அத்துடன், வங்கி கணக்கில் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் ஆதார் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>