என்னது.. கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்துட்டேனா.. ? அதிர்ச்சியில் தமிழிசை

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டதாக வந்த மின்னஞ்சலால் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் குதிக்கப்போவதாக சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால், நடிகர் கமல்ஹாசன் மவுனமாகவே இருந்து வந்து திடீரென ஒரு நாள் அரசியல் களத்தில் குதித்தது மட்டுமல்லாமல் கட்சிப் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்தார். இதற்காக, மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, கட்சியில் இணைவதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பலர் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசனின் கட்சியில் இணைந்துவிட்டதாக இமெயில் வந்துள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ&மெயில் வந்துள்ளது. உறுப்பினர் எண்ணும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களை சேர்க்க கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கு எல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார். இதுபோன்ற மோசடி நடைபெற்றால், அவர் கட்சியில் யாரெல்லாம் உறுப்பினர் என்று எப்படி நம்புவது. தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நடிகர்களால் நிரப்ப முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>