எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவா, பாசிடிவா? மகன் சரண் வீடியோவில் அதிர்ச்சி தகவல்..

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று அறிகுறி, காய்ச்சல் இருப்பதாகக் கடந்த 5ம் தேதி கூறிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த 2 நாளில் அவரது உடல்நிலை மோசமானது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த சூழலில் அமெரிக்க டாக்டர்களுடன் ஆலோசித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று நெகடிவ் என்று தகவல் பரவியது. அதை மகன் எஸ்பிபி சரணும் உறுதி செய்தார். ஆனால் திடீரென்றூ அவர் தற்போது வெளியிட்ட வீடியோவில் என் தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை அவருக்குச் செயற்கை சுவாசம் தரப்படுகிறது என்று சொல்லி அதிர்ச்சி அளித்திருக்கிறார்.சரண் வீடியோவில் கூறியிருப்பதாவது:இன்று காலை முதல் வதந்தி பரவி வருகிறது. எனது தந்தைக்கு கொரோனா தொற்று நெகடிவ் ஆகியிருக்கிறது. அந்த தகவலை என்னை இணைய தளத்தில் பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் எனது தந்தை உடல்நிலை பற்றி டாக்டர்களுடன் நான் தினமும் ஆலோசித்து வருகிறேன். அவருக்கு இன்னும் வென்டிலேட்டரில்தான் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது, எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் உடல்நிலை சீராக உள்ளது.

கொரோனா நெக்டிவா பாஸிடிவா என்பதல்ல அவர் உடல் நலமடைய வேண்டியது முக்கியம். அதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது, என் தந்தை பற்றிய தகவல் முதலில் எனக்குத்தான் மருத்துவமனையிலிருந்து வரும். எனவே தயவு செய்து அவரது உடல்நிலை பற்றி வதந்திகள் எதுவும் பரப்ப வேண்டாம். இன்று மாலை மருத்துவர்களிடம் ஆலோசித்துவிட்டு அதன்பிறகு நான் தெரிவிக்கிறேன்.இவ்வாறு எஸ்பிபி சரண் கூறினார்.கடந்த 2 நாட்களுக்கு முன் பாரதிராஜா, இளையராஜா, ரஜினிகாந்த், சிவகுமார், நடிகை சரோஜாதேவி, சரத்குமார், ராதிகா, விஜய், சூர்யா. கார்த்தி என ஒட்டு மொத்த நட்சத்திரங்களும் இயக்குனர்களும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் பெப்ஸி தொழிலாளர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

More News >>