கேஜிஎப் 2 படப்பிடிப்பு தொடங்கியது

கடந்த இரு வருடங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகமான கேஜிஎப் 2 படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கியது. ஆனால் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. பெங்களூரூவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரகாஷ்ராஜ் மற்றும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக வருகிறார். பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்டோபர் 23ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது.

More News >>