இது ஒரு நல்ல அறிகுறி...எஸ்பிபி பற்றி மகன் சரண் அப்டேட்...!

பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக திரையுலகினரும் ரசிகர்களும் எஸ்பிபி குணம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்த னை செய்தனர்.

டாக்டர்கள் சிகிச்சை, பிரார்த்தனை களுக்குபிறகு எஸ்பிபி பற்றி நல்ல செய்தி களாக வந்துக்கொண் டிருக்கிறது, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மகன் தெரிவித்திருக் கிறார்.

இன்று சரண் வெளியிட்டுள்ள வீடியோ வில்,எனது தந்தையின் உடல்நிலை பற்றி இன்றைக்கு சுருக்கமான தொகுப்புத்தான் சொல்லவிருக்கிறேன். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன்தினத்தைவிட இன்றைக்கு அப்பா வின் நுரையீரலில் நல்ல முனேற்றம் உள்ளது. இது அவர் குணம் அடைவதற் கான நல்ல அறிகுறி. பிரார்த்தனைகள் தொடர்ந்து அவருக்காக நடந்து வருகிறது. எனது நண்பர் விஜய் வசந்த தந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவருக்காக விஜய் வசந்தும் வருத்தத்தில் இருக்கிறார். அவருக்கு தைரியம் வரவும் பிரார்த்தனை கள் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கி றேன் என்று கூறி உள்ளார்.

View this post on Instagram

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on Aug 28, 2020 at 6:23am PDT

இந்நிலையில் நேறு மாலை சரண் வெளி யிட்ட வீடியோவில்,அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. இன்றைக்கு நான் மருத்துவமனை செல்ல வில்லை. டாக்டர்கள் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரார்த்தனை களும் கைகொடுத்து வருகிறது. பழைய நிலைக்கு அவர் திரும்பிக்கொண்டிருகிறார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படு கிறது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது அவரது உடல்நிலை குறித்து வரும் நாட்களில் நான் இன்னும் விரிவாக அப்டேஸ் தருவேன் ஆனால் எதுவும் சந்தோஷ மான செய்தி இல்லை. அப்பா உடல்நிலை சீராக உள்ளது. அத்துடன் கொரோனா தொற்று பாசிடி வாக இருக்கிறது. இன்னும் சிகிச்சை தொடர்கிறது. அவரது உடல்நிலை சீராகி வருகிறது; என்றார்.

More News >>