அனைவருக்கும் எனது இதயம்‌ கனிந்த நன்றி - நடிகர் சூரி

நடிகர் சூரி தனது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டனர். இதுபற்றி நெகிழ்ச்சியாக அறிக்கை வெளியிட்டார். அதில் சூரி கூறியதாவது:‌

அனைவருக்கும்‌ வணக்கம்‌, உங்கள்‌ அன்பு எனும்‌ வாழ்த்து மழையால்‌ என்னை முழுவதும்‌ நனையவைத்து என்‌ பிறந்த நாளை சிறந்த நாளாய்‌ மாற்றிய உங்கள்‌ அனைவருக்கும்‌ எனது இதயம்கனிந்த நன்றிகள்‌. நேற்று என்‌ பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்‌ கூறிய தயாரிப்பாளர்கள்‌, இயக்குனர்கள்‌, நடிகர்கள்‌, நடிகைகள்‌, பத்திரிக்கை மற்றும்‌ ஊடக நண்பர்கள்‌, சமூக வலைதள நண்பர்கள்‌ அனைவருக் கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

என்‌ நற்பணி மன்றம்‌ சார்பில்‌ பல மாவட்டங்களில்‌ குருதிக்கொடை கொடுத் தும்‌ அன்னதானங்கள்‌ வழங்கியும்‌, இந்த கொரோனா காலகட்டத்தில்‌ மிகவும்‌ சிறப் பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும்‌ விதமாக பொன்னாடை அணிவித்து உணவு மற்றும்‌ அத்தியாவசிய பொருட்களை வழங்கியும்‌ மரக்கன்று களை நட்டும்‌ ஆதரவற்றோர்‌ மற்றும்‌ முதியோர்‌ இல்லங்களுக்கு உணவு மற்றும்‌ உடைகளை வழங்கிய என்‌ உடன்‌ பிறவா சகோதரர்களாகிய ரசிகர்கள்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. சிறப் பாக செயல்பட்ட அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும்‌, ரசிகர்களை வழி நடத்தும்‌ நற்பணி மன்ற தலைவர்களுக்கும்‌ எனது இதயம்‌ கனிந்த நன்றியை காணிக்கையாக் குகிறேன்‌ நன்றி.இவ்வாறு நடிகர் சூரி கூறி உள்ளார்.

கொரோனாவில் ஹீரோக்கள் எப்படி பிறந்த நாள் கொண்டாடினார்கள் என்பது இம்முறை பெரிதாக தெரியவில்லை. காமெடி நடிகர் சூரி பிறந்தநாள் ஜாம் ஜாம் என்று நடந்திருக்கிறது. கூட்டம் சேர்க்கா மலே நற்பணிகள், கொரோனா உதவிகள் செய்து அசத்தினார்கள். அவரது பிள்ளை கள் கேக் வாங்கி வைத்து ரூ 4 ஆயிரம் செலவானது அதை தந்துவிட்டு கேக் வெட்டலாம் என காமெடி விளையாட்டு நடத்தி மகிழ்ந்தார்கள்.

More News >>