இந்தியாவில் கொரோனா பாதிப்பு 34 லட்சம் தாண்டியது.. பலி 62,550 ஆக உயர்வு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது. இது வரை இந்நோய்க்கு 62,550 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அதிகபட்சமாக, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் 59 லட்சம் பேரும், பிரேசிலில் 38 லட்சம் பேரும், இந்தியாவில் 34 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 34 லட்சத்து 63,973 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 26 லட்சத்து 48,999 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 7 லட்சத்து 52,424 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1021 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 62,550 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று 9 லட்சத்து 28,761 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரை 4 கோடி 4 லட்சத்து 6609 பேருக்குச் சோதனை செய்யப்பட்டிருக்கிறது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கொரோனா பரவல் இன்னும் பல மாநிலங்களில் கட்டுப்படவில்லை. கடந்த 17ம் தேதியன்று புதிதாக 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், 28ம் தேதியன்று இது 76,472 ஆக அதிகரித்துள்ளது.

More News >>