பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி...!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பாகு பாடு இல்லாமல் கோரத் தாண்டவ ம் ஆடிக் கொண்டிருக்கிறது. 5 மாத காலம் லாக் டவுனில் மக்களை அரசாங்கம் கட்டுப் படுத்தியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று அனைத்து துறையையும் முடக்கிப்போட்டுள்ளது.

வேலைக்குச் செல்வோர் வீட்டுக்குள்ளேயே பூட்டிக் கொண்டிருப்போர் ஏழை பணக் காரன் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. திரையுலகைப் பொறுத்த வரை அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமவுலி, விஷால். கருணாஸ், ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கணேஷ் கொரோன தொற்றுக்குள்ளாகி சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

More News >>