பிரபல நடிகையின் படம் ஒடிடியில் படுதோல்வி...யாரென்றே எனக்கு தெரியாது என்று கூறியதன் விளைவு...!

பகலில் பக்கம் பார்த்து பேசு இரவிலும் அதையும் பேசாதே என்று சொல்வார்கள். ஆனால் ஒரு நடிகை அக்கம் பார்க்காமல் பேசிய பேச்சு துரத்தி துரத்தி அடிக்கிறது. அந்த நடிகை அலியா பட்.

சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டபோது அதற்கு காரணம் வாரிசு நடிகர் நடிகைகள்தான் காரணம் என்று விவாதம் எழுந்தது. ஒருமுறை அலியா பட்டிடம் சுஷாந்த் பற்றி கேட்டதற்கு அவர் யாரென்றே எனக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் அளித்தார் சொன்னார்.

தோனி வாழ்க்கை படத்தில் டோனியாக நடித்த ஒருவரை தெரியாது என்பது சுஷாந்தை அலியாபட் அவமதித்தற்கு சமம் என்று ரசிகர்கள் கருதினர். மேலும் சுஷாந்த் இறந்தபோது பாலிவுட் அதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரித்தபோது அலியாபட் வாய் மூடிக்கிடந்தார். தனது தந்தை மகேஷ்பட் பாலிவுட் இயக்குனர் என்பதாலே அவர் அப்படி நடந்துக் கொண்டதாக ரசிகர்கள் தாக்கியதுடன், சுஷாந்த் தற்கொலைக்கு இவர் அவமானப் படுத்தியதும் காரணம் என்று ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர்.

இந்நிலையில் மகேஷ் பட் இயக்கத்தில் அலியாபட் நடித்த சடக் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது. அது உலகிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டிரைய்லராக அமைந்தது. தற்போது சடக் 2 படம் ஒடிடியில் படுதோல்வி பட்டிய லில் சேர்ந்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அமேசான் நிறுவனத்தின் திரைப்படங் களை பற்றிய விவரங்களை வெளியிடும் தளமான ஐஎம்டிபி (IMDB) பல படங் களுக்கு ஸ்டார் ரேட்டிங்குகளை கொடுத்து வருகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தின் தில் பேச்சாரா படத்திற்கு முழு மதிப்பெண் வழங்கப் பட்ட நிலையில், அலியா பட்டின் சடக் 2 படத்துக்கு வெறும் 1.1 ஸ்டார் ரேட்டிங் தான் கொடுத்துள்ளது.

இது அலியாபட்டின் அடாவடிக்கு மட்டுமல்ல படமே ஒன்றுக் கும் ஆகாது என்ற ரேஞ்சிக்கு கிழித்து தள்ளியிருக்கிறார்கள் விமர்சகர்கள், ஆனால் கடந்த 1991ம் ஆண்டு மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான சடக் முதல் பாகம் பெரிய ஹிட்படமாக அமைந்தது. அதில் சஞ்சய்த்த் நடித்திருந்தார். சடக்2 படத்திலும் சஞ்சய் தத் நடித்திருந்தார். சடக் 2 வில் சஞ்சய் தத்துடன் ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர்.

More News >>