படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் ஒரு சிறப்புத் திட்டம்...!

NEEDS ( New Entrepreneur cum Enterprises Development Scheme ) படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும் , வணிகம் சார்ந்து இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காகவும் அரசு தனது 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் NEEDS திட்டத்தை அறிமுகம் செய்தது .2012-2013 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது .

திட்ட நோக்கம்

1.படித்த முதல் தலைமுறை இளைஞர்களை , தொழில்முனைவோராக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

2. தொழில்முனைவோருக்கான பயிற்சிகளை வழங்குவது , அவர்களுக்குப் பயிற்சி முடிந்த பின் வங்கிக் கடன் தயார் செய்து கொடுப்பது போன்றவற்றையும் உருவாக்கப் பயன்படுகிறது.

செயல்படுத்தும் அமைப்புகள்

1. பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பது > மாநில அளவில் செயல்படுத்த Commissioner of industries and commerce , Chennai > மாவட்ட அளவில் செயல்படுத்த General manager of district industries .

2. தொழில்முனைவோருக்கான பயிற்சியை வழங்குதல் > மாநில மற்றும் மாவட்ட அளவில் Entrepreneurship Development Institute, Chennai

3.வங்கிக் கடன் ஏற்பாடு செய்தல் > மாநில அளவில் செயல்படுத்த Tamilnadu Industrial Investment corporation, Chennai (TIIC) > மாவட்ட அளவில் செயல்படுத்த General manager of District industries .

பயிற்சி மையம்

NEEDS திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக Entrepreneurship Development Institute Guindy , Chennai ல உள்ள அமைப்பு செயல்படுகிறது.

பயிற்சி முறைகள்

இந்த மையத்தின் மூலம் நடத்தை கூறுகள் , வணிக வாய்ப்புக்கான வழிமுறைகள், சிறு , குறு தொழில் நிலையங்களில் பின்பற்றப்படும் சட்ட திட்டங்கள் , மேலாண்மை சவால்களை எதிர்கொள்ளுதல் , வெற்றி பெற்ற தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றை இந்த அமைப்பு ஏற்படுத்தித் தருகிறது.

பயிற்சிக்கான கால அளவு

EDP பயிற்சியானது ஒரு மாதம் அளிக்கப்படுகிறது. அதில் முதல் இரண்டு வாரம் theoretical பயிற்சியும் , 1 வாரம் சந்தை கணக்கெடுப்பு பற்றியும் , 1 வாரம் திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கான வழி முறைகளும் பயிற்சியாக அளிக்கப்படுகின்றன.

பாடத் திட்டங்கள் 1.நடத்தை கூறுகள் ( Behavior Components) 2. business opportunity guidance ( வணிக வாய்ப்புக்கான வழிமுறைகள்.3. Business plan preparation ( வணிக திட்டம் தயார் செய்தல் ) 4. Management issue ( மேலாண்மை சவால்கள்).5. Law regulating the small business ( சிறு வணிகங்களுக்கான சட்ட திட்டங்கள்.6. Environment Scanning

போன்றவைகள் நடத்தப்படும்.

தகுதிகள்

1.பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது முதல் 35

2. மற்ற பிரிவினருக்கு ( BC , MBC , SC ,ST ,Women , BCM, Transgender , ) வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் 45.

கல்வித் தகுதிகள்

பட்டப்படிப்பு , பட்டய படிப்பு , ITI

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

பயனாளிகளுக்கான இட ஒதுக்கீடு

SC -18 %ST -1%மாற்றுத்திறனாளிகள் - 3% பெண்கள் -50% ( விதவைகள் , ஆதரவற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.)

இந்த திட்டத்தில் பயனடைய எந்த விதமான வருமான எல்லையும் இல்லை .

திட்ட மதிப்பீடு

1. திட்டத்தின் மதிப்பீடு குறைந்தபட்சம் 5 இலட்சத்தில் மேலாகவும் , அதிகபட்சமாக 1 கோடி வரையும் இருக்கலாம்.

2. இடத்திற்கான மதிப்பையும் இந்த திட்டத் தொகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

பயனாளிகளின் பங்களிப்பு

1. பொதுப்பிரிவினர் தங்களின் திட்ட மதிப்பீட்டில் 10% தனது பங்களிப்பாகக் கொடுக்க வேண்டும்.

2.மற்ற பிரிவினருக்குத் திட்ட மதிப்பீட்டில் 5% தனது பங்களிப்பாகக் கொடுக்க வேண்டும்.

மானியம்திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 25 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

More News >>