காலமானார் பிரணாப் முகர்ஜி!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அதன்பிறகு, பிரணாப்புக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வென்டிலேட்டரில் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவருக்குச் சுயநினைவு போனதால் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதற்கிடையே, அவர் மரணமடைந்து விட்டதாகத் தகவல் பரவி பின்னர், அத்தகவல் பொய்யானது என்று மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரணாப் உடல்நிலை, தொடர்ந்து சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்தார். ஆனால் அதன்பின் மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை உறுதி செய்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதிலிருந்து அவர் கோமா நிலையில் இருந்தார். பின்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவர் உடலில் பல்வேறு நோய்கள் இருப்பதால் அவருடைய உடல்நிலை சிகிச்சையை ஏற்றுக்கொள்வதில் மிகவும் பின்னடைவை சந்தித்தது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சியளித்து வந்தனர். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல், பிரணாப் முகர்ஜி சற்றுமுன் இறந்துள்ளார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News >>