ஷாருக்கான் படத்தை இயக்கும் அட்லீ.. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டம்..

இயக்குனர் ஷங்கர் உதவியாளரான அட்லி நடிகர் ஜெய், நயன்தாரா ஜோடியாக நடித்த ராஜா ராணி' படத்தை முதல் படமாக இயக்கினார். அப்படம் ஹிட் ஆனது. அடுத்த படமாகத் தளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கி கலக்கினார். அடுத்தடுத்து விஜய்யுடன் 'மெர்சல்' மற்றும் 'பிகில்' இயக்கி கோலிவுட்டை அதிர வைத்தார். மீண்டும் பிகில் படத்தின் 2ம்பாகத்தை இயக்குவேன் என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறினார். கோலிவுட்டில் ஒரே பாய்ச்சலில் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்துக் கொண்ட அட்லீ அடுத்து பாலிவுட்டுக்குக் குறி வைத்திருக்கிறார்.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க கடந்த ஒரு வருடமாக மெனக் கெட்டு வருகிறார் அட்லி. சென்ற ஆண்டு நேரில் சென்று அவரிடம் கதை சொன்னார். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை புதிய ஸ்கிரிப்ட் மற்றும் சொன்ன ஸ்கிரிப்ட்டில் பல மாற்றங்கள் செய்யக்கேட்டார் ஷாருக். அதன்படி மீண்டும் ஸ்கிரிப்ட்டில் மாற்றங்கள் செய்தார். தற்போது அது ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஷாருக் நடித்துத் தயாரிக்கும் படத்தை இயக்க அட்லீ ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் 2021 மத்தியில் படப்பிடிப்புக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் அட்லீ ஈடுபட்டிருக்கிறாராம்.அட்லீ படத்தில் ரா ஏஜெண்டாக நடிக்கவுள்ளார் ஷாருக்கான் பல்வேறு நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வெளிநாட்டு நாடுகளில் ஏராளமான கார் துரத்தல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் படப் பிடிப்பு திட்டமிடப்பட்டு வருகிறது. இப்படத்துக்காகப் பிரமாண்ட அரங்கும் அமைக்கப்படவிருக்கிறது.

More News >>