அன்று நான் என் அக்காவுக்கு செய்ததை நினைத்தால் இப்போது எனக்கு கலக்கமாக இருக்கிறது - நடிகை பூர்ணா

மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்படத் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா. இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் கூட.... தனது நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இவர் ஏராளமான நாடுகளுக்குச் சென்றுள்ளார். தமிழில் இவரது பெயர் பூர்ணா என்றாலும் மலையாளத்தில் இந்த நடிகையின் பெயர் ஷம்னா காசிம். இது தான் அவரது இயற்பெயரும் கூட. இவரது தந்தையின் பெயர் காசிம். இவர் தனது பெற்றோருடன் கொச்சியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரைப் பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறி ஒரு கும்பல் பூர்ணாவை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை பூர்ணா தன்னுடைய இளமைப் பருவத்தில் நடந்த ஒரு ருசிகர சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுவதைக் கேட்போம்.... எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் எனக் கருதுகிறேன். என்னுடைய மூத்த அக்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்து அவர் பல கனவுகளுடன் முதலிரவு அறைக்குச் சென்றார். ஆனால் என்னுடைய அக்கா அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பாகவே நான் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டேன்.

இதைப் பார்த்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். நான் அவரிடம், 'நீங்கள் இங்கே கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு ஓரமாகப் படுத்துக் கொள்கிறேன்' என்றேன். நான் முதல் இரவு அறைக்குள் புகுந்து ரகளை செய்வது குறித்து அறிந்த எனது தாய் ஓடிவந்து, என்னை அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். இந்த சம்பவத்தால் வீடே கலவரமானது. வீட்டிலிருந்த அனைவரும் பதறியடித்துக் கொண்டு வந்தனர். அனைவரும் எனக்கு ஆசை வார்த்தைகளைக் கூறியும், பரிசுப் பொருள் தருவதாகவும் கூறி அழைத்துப் பார்த்தனர். ஆனால் நான் அதற்கெல்லாம் மசியவில்லை. என்னோட அக்காவின் முதலிரவு அறையில் தான் நான் அன்று படுத்துத் தூங்கினேன். பின்னர் அக்கா என்னிடம் மிரட்டும் தொனியில் கூறிய வார்த்தை இப்போது எனக்கு நினைவில் இருக்கிறது. உன்னுடைய முதல் இரவு வரட்டும் அப்போது நான் பார்த்துக்கொள்கிறேன், இதற்குப் பலிவாங்காமல் விடப்போவதில்லை என்று கூறினார். அதை நினைத்துத் தான் இப்போது எனக்குக் கலக்கமாக இருக்கிறது என்கிறார் பூர்ணா.

More News >>