மலிங்கா அவுட்.. ஜேம்ஸ் பட்டின்சன் இன்.. மும்பை அணிக்கு பின்னடைவு?!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. ஆனால் இன்னும் போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை. இதனால் ஐபிஎல் நடக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதுஒருபுறம் என்றால், மறுபுறம் சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ளார். சூழ்நிலைகள் இப்படி இருக்க, இப்போது மும்பை அணியின் முக்கிய தூணும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்காவும் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ``தனிப்பட்ட காரணங்களால் மலிங்காவால் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. துபாயில் இருந்து திரும்பிய பிறகு இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருடன் மலிங்கா இருக்கப்போகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பௌலர் ஜேம்ஸ் பட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

More News >>