தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய அணி..

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டால் தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கனவே இதற்கான தேர்தலில் டி.சிவா தலைமையிலான அணியும், முரளி ராமநாராயணன் தலைமையிலான அணியும் போட்டியிடுவதாக இருந்தது.தற்போது பாரதிராஜா தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கம் தொடங்கியதால் அங்குப் பலர் உறுப்பினர்கள் ஆகிவிட்டனர். டி.சிவா இச்சங்கத்தில் நிர்வாக பொறுப்பு ஏற்றிருக்கிறார்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட புதிய அணி உருவாகிறது. நமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜய சேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி வகித்த நிர்வாகிகள் சரியாகச் செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதியவர்கள் தலைமையேற்று நல்ல நிர்வாகம் அமையக் கலந்துரையாடப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தில் விஜய சேகரன், எஸ்டி சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வ ராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல் ராஜ், தன சண்முக மணி, வெங்கடேஷ் துருவா மற்றும் பல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். கூடிய விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று புதிய அணியினர் தெரிவித்துள்ளனர்.

More News >>