உயிர் ரசிகரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் ஹீரோ..

தனக்குப் பிடித்த ஹீரோக்கள் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் ஏராளமானவர்கள். அதேபோல் உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் மீது பாசத்தைக் காட்டும் ஹீரோக்களும் உள்ளனர். கோலிவுட்டில் மட்டுமல்ல டோலிவுட்டிலும் அப்படி ஒன்றிரண்டு ஹீரோக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர் சுரேஷ் பாபு. நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணா கட்டமனேனி மற்றும் மகேஷ் பாபுவின் நெல்லூர் மாவட்ட ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். நேற்று முன் தினம் சுரேஷ் பாபு மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது தீவிர ரசிகர் சுரேஷ் பாபுவின் மறைவுக்குத் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இரங்கல் தெரிவித்தார். சுரேஷ் பாபு இருதயக் கோளாறு காரணமாக இறந்தார்.

சுரேஷ்பாபு மறைவுக்கு மகேஷ் பாபு வருத்தத்தைத் தெரிவித்ததோடு, தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் சுரேஷ் பாபு தன்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட மகேஷ்பாபு, "சுரேஷ் பாபுவின் அகால மறைவு பற்றி கேள்விப்பட்டால் மனம் உடைக்கிறது. அவர் உண்மையிலேயே நான் மிஸ் செய்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு அன்பும் பலமும் இறைவன் தரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.சுரேஷ் பாபுவின் இறுதிச் சடங்குகள் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் முன்னிலையில் நெல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்த்தப்பட்டன. மரியாதைக்குரிய அடையாளமாக ரசிகர்களால் பைக் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் அன்ன பூர்ணா ஸ்டுடியோவில் ஒரு விளம்பரத்திற்காக படப்பிடிப்பில் பங்கேற்றார். மேலும் தற்போது பரசுரம் இயக்கும் சர்காரு வாரி படா படப்பிடிப்புக்கு காத்திருக்கிறார். இந்த படம் ஒரு அதிரடி பொழுதுபோக்கு மற்றும் மகேஷ் பாபு இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் அனில் கபூர் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.

More News >>