குரங்கணி தீ விபத்தில் மேலும் ஒருவர் மரணம்! பலி எண்ணிக்கை உயர்வால் வேதனை

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே, மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேரும் இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த துயர சம்பவத்தில், 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும், மருத்துவமனையில் 90 சதவீதம் காயங்களுடன் மற்றவர்களை அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், அடுத்தடுத்த நாட்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கிடையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். குரங்கணி காட்டுத் தீ விபத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் மரணம் அடைந்தவர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>