சசிகலாவிற்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு ?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடராஜனை காண, சசிகலாவுக்கு பரோல் வழங்க முடியாது என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நேற்றைய தினத்தில் நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கணவர் நடராஜனை சந்திக்க அனுமதிக்குமாறு சசிகலா தரப்பில் பரோல் மனுவிற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பதால் மீண்டும் பரோல் வழங்க முடியாது என்றும், அப்படியே தர வேண்டிய கட்டாயம் இருந்தால் நெருங்கிய உறவினர் உயிரிழப்புக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், சசிகலா தரப்பினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>