ldquoஜெயலலிதா வளர்த்த நான்காம் தமிழ்rdquo - அமைச்சர் ஜெயக்குமார் கண்டுபிடிப்பு

நான்காம் தமிழாம் அறிவுத் தமிழை வளர்த்தவர் ஜெயலலிதா. அதனால் தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பழங்குயினரின் வனம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறும்படி தமிழர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். தமிழ் மக்கள் மீது மாற்று மொழியை திணிக்கின்றனர்.

தமிழ் மொழி குறித்து ராகுல் காந்தி பேசியது பற்றி, அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

தேமதுர தமிழோசை வந்து உலகமெங்கும் பரவ வேண்டும் என்று அண்ணாவும் சரி, ஜெயலலிதாவும் சரி அந்த அளவுக்கு தமிழை வளர்த்தார்கள். நான்காம் தமிழாம் அறிவுத் தமிழை வளர்த்தவர் ஜெயலலிதா. அதனால் தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தமிழ்மொழியானது உலகம் இருக்கும் வரை தழைத்தொங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>