8 வருட நட்சத்திர காதல் ஜோடி கோவாவில் குதுகல கொண்டாட்டம்.. காதலனின் ஆசை நிறைவேறியது..

கோலிவுட்டில் நாங்கள் காதல் ஜோடிகள் என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் ஜோடி விக்னேஷ் சிவன், நயன்தாரா. இதனால் இவர்களுக்கு பட வாய்ப்பு குறைந்தது என்று சொல்வதற்கில்லை. நயன்தாரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மவுசு குறையாமல் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அதிக படங்கள் இயக்கவிட்டாலும் படத் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துவதுடன் அவ்வப்போது படம் இயக்கும் வேலையும் கவனித்துக்கொள்கிறார். நிறையப் படங்களுக்குப் பாடல்கள் எழுதுகிறார்.

முன்னதாக சிம்பு நடித்துள்ள 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்து 'நானும் ரவுடிதான் பிளாக்பஸ்டர் படத்தை இயக்கினார். இதில் விஜய் சேதுபதி நயன்தாரா ஜோடியாக நடித்தனர். இப்படம் வெற்றி பெற்றது. அதே வேகத்தில் படத்தில் நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இதுவொரு தொடர் கதை போல் இவர்களின் காதல் 8 வருடம் டேட்டிங்கிலேயே கழிகிறது. அதில் இருவருக்குமே திருப்திதான். நினைத்தால் வெளிநாட்டுக்கு இந்த ஜோடி பறந்து விடுகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாகக் கட்டிப் போட்டது போல் வீட்டிலேயே விக்னேஷ், நயன் ஜோடி முடங்கி இருக்கிறது. எப்போது ஜோடியுடன் ஊர் சுற்றும் நேரம் வருமோ? என்று விக்னேஷ் சிவன் தனது ஏக்கத்தையும் ஆசையையும் வெளிப்படுத்தி இருந்தார். அதற்கான நேரம் வந்தது. ஊரடங்கு தளர்ந்தது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இந்த வாரத் தொடக்கத்தில் கோவாவுக்குச் சென்று நயன்தாராவின் தாயின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

அதேபோல் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை கோவாவில் உள்ள ஸ்டார் ஓட்டலில் கொண்டாடினர். காதலி நயன்தாராவின் இதமான அரவணைப்புடன் மழையின் தூறலை ரசித்தபடி ஒரு அசத்தலான ஸ்டில் பகிர்ந்து கொண்டிருக்கிறது.விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஜோடியும் நடிக்க உள்ளனர். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

More News >>