போதை மருந்து விவகாரத்தில் கைதான நடிகை மதம் மாறி மஹிரா ஆன டாக்குமென்ட்டால் பரபரப்பு.. உஷார் உஷார்.. ஹீரோக்களின் தடாலடிகள் மலையேறும் காலம் நெருங்குகிறது..

அரசியல், தடாலடி அறிவிப்புக்குகள் என்று ஹீரோக்கள் கலக்கிய காலம் மலையேறிவிடும்போல் தெரிகிறது. ஹீரோயின்கள்தான் தற்போது அந்த தடாலடிகளை நிகழ்த்திக்கொண்டிருக் கின்றார். இவரைத்தான் காதலிக்கிறேன் என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தனிவிமானத்தில் உல்லாச பயணம் செல்கிறார் நயன்தாரா .

போதை மருந்து எடுக்கும் நடிகர்களை மாட்டிவிடுகிறேன் என்று மத்திய அரசின் கமாண்டோ பாதுகாப்புடன் வலம் வருகிறார் கங்கனா ரனாவத். அவரை ஊரை விட்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு நக்மாவும், ஊர்மிளாவும் ஸ்டேட்மெண்ட் விட்டு லைப் ரைட் வாங்குகிறார்கள். இந்த ஜகடால் ஒருபுறம் என்றால் போதை மருந்து கடத்தலில் சம்பந்தப்பட்டதாக சுஷாந்த் காதலி ரியா சக்ரபோர்தி கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார். அதேபோல் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதை மருந்து விவகாரத்தை விசாரிக்க சென்றபோது அஜீஸ் பாஷாவுடன் சஞ்சய் கல்ராணியின் ரகசிய கல்யாண தகவலும் புகைப்படமும் அம்பலமானது. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று ஒவ்வொவொரு நாளும் ஒரு கிளைமாக்ஸ் போல் நடிகைகளின் இந்த தடாலடிகள் ஹீரோக்களையே அய்யோடி சொல்ல வைத்திருக்கிறது.

சஞ்சனா கல்ராணி பற்றி மற்றொரு அதிர்ச்சியாக அவர் இஸ்லாம் மதத்துக்கு 2018ம் ஆண்டே மாறி தனது பெயரை மஹிரா என மாற்றிக்கொண்டிருப்பதாக தகவலுடன் ஒரு டக்குமெண்ட்டும் வலம் வந்துக்கொண்டிர்கிறது.வெளி உலகத்தில் பளபளப்பு காட்டும் நடிகைகளின் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு மர்மங்களா என்று நெட்டிஸன் கள் அச்சமும், ஆச்சரியமும் தெரிவித்திருக் கின்றனர். ஹீரோக்கள் தங்கள் கெத்தை இழக்காமலிருக்க வேண்டிய நேரம் உஷார் உஷார் என நெட்டிஸன்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

More News >>