கொரோனா தொற்றில் பாதித்த நடிகைக்கு வாய்ப்பு பறிபோனது.. போனால் போகட்டும் போடா மீண்டதே போதும் என்கிறார் ஹீரோயின்..

நடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தக தைய தைய பாடலுக்கு நடனம் ஆடியவர். சமீபத்தில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மகனைப் பிரிந்து மற்றொரு வீட்டில்தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மகனைக் கட்டி அணைக்க முடியாமல் தூரத்திலிருந்து பார்த்து ஏங்கினார் மலைக்கா. மகனும் தாயைப் பார்த்து சோகத்துடன் நின்றார். இந்த புகைப் படத்தை மலைகா வெளியிட்டிருந்தார். அது ரசிகர்களிடையே சென்டிமென்ட் டாக டச் ஆனது. நீங்கள் சீக்கிரம் குணம் ஆகி குடும்பத்தினருடன் சேர்வீர்கள் என்று அவருக்கு செலப்ரட்டிகளும் ரசிகர்களும் ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் மலைகா கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார். நோய்த் தொற்று குணம் ஆனதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருக்கிறார் . இதுபற்றி அவர் கூறும்போது,மருத்துவ உதவியுடன் என்னைத் தனிமைப்படுத்தி இருந்த எனது டாக்டருக்கு பெரிய நன்றி. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள். அக்கம்பக்கத்தினர், ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுடை நல்லாசி தான் எனக்கு பலத்தைக் கொடுத்தது. வார்த்தைகளால் மட்டும் அவர்களுக்கு நன்றி சொன்னால் போதாது. எனது கடினமான நேரத்தில் அவர்கள் செய்த உதவியை மறக்க முடியாது. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்றார்.

முன்னதாக மலைகா அரோரா இந்தியாஸ் பெஸ்ட் டேன்ஸர் என்ற டிவி ஷோவில் நடுவராக பிஸியாக சூட்டிங்கில் பங்கேற்று வந்தார். கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டதால் நடுவர் வாய்ப்பு பறிபோனது. அவருக்குப் பதிலாக நடிகை நோர ஃபதேஹிக்கு அந்த வாய்ப்பு சென்றது. வாய்ப்பு போனால் போகட்டும் போடா நோய் தொற்றிலிருந்து மீண்டதே போதும் என்று சந்தோஷத்தில் இருக்கிறார் மலைகா.ஏற்கனவே பாலிவுட்டில் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், அர்ஜூன் கபூர், ஐஸ்வர்யாராய், கனிகா கபூர், ஜெனிலியா போன்றவர்கள் கொரோனா பாதித்து சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>