பிரபல தமிழ் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் என்றதால் அதிர்ச்சி.. மூடிய கதவுகளுக்கு பின்னால் நடப்பதற்கு ஆதாரம் எங்கு தேடுவது?

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாசப் படம் போட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அங்கிருந்து நான் தப்பி வந்தேன் என்றார். ஆனால் பாயலின் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று அனுராக் கூறினார். மேலும் நடிகைகள் டாப்ஸி, ராதிகா ஆப்தே அனுராக் முதல் மனைவி மற்றும் 2வது மனைவி ஆகியோர் அனுராக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பெண்கள் பாதுகாப்புக்காக அவர் முன்னுரிமை கொடுப்பவர் என்று நற்சான்று கொடுத்தனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி டிவிட்டரில் வெளியிட்டுள்ள மெசேஜில். இயக்குனர் அனுராக் காஷ்யப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நடிகை பாயல் கோஷ் புகார் கூறி உள்ளார். ஆனால் சட்டப்படி, உறுதியான ஆதாரங்கள் தேவை. ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் கொடுமை புகார்களை நிரூபிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் பெயர் அல்லது அனைவரின் பெயரையும் கெடுக்கக்கூடும். எதுவும் நல்லதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் புகாருக்கு சட்டப்படி ஆதாரம் தேவை என்று கஸ்தூரி கூறியதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உங்களுக்கு நெருக்கமானவர் யாருக்காவது இதுபோல் நடந்திருந்தால் அப்போதும் ஆதாரம் கேட்பீர்களா எனக் காட்டமாகக் கேட்டார்.அதைக்கண்டு அதிர்ச்சியான கஸ்தூரி. எனக்கு நெருக்கமானவர் என்ன..? எனக்கே அப்படி நடந்திருக்கிறது என்று ஷாக்கான பதில் அளித்தவர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ற ஹேஷ்டேக் வெளியிட்டிருக்கிறார். நடிகை கஸ்தூரி தனக்கே பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>