மிகுந்த வலியோடு வெளியேறினேன்.. காயத்தின் வேதனையை விவரித்த அஷ்வின்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியின் போது 6வது ஓவரை வீசிய டெல்லி அணியின் அஷ்வின், முதல் பந்தில் கருண் நாயர், 5வது பந்தில் பூரனை அவுட்டாக்கி வெளியேற்றினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மேக்ஸ்வெல் அடிக்க தேவையில்லாமல் அதைத் தடுக்க முயன்று காயத்தை வாங்கிக்கொண்டார் அஷ்வின். அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனே பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். தோள்பட்டையில் பலமாகக் காயம்பட்டிருப்பதால், தொடரில் இருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அவருக்குப் பெரியளவில் காயம் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.இந்நிலையில், இது தொடர்பாகப் பேசியுள்ள அஷ்வின், ``மிகுந்த வலியோடு அன்றிரவு ஆடுகளத்தை விட்டு நான் வெளியேறினேன். எனினும் இப்போது வலி குறைந்துள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் டெல்லி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News >>