20 கோடி பேர்... சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் மேட்சை பார்த்த ரசிகர்கள்!

இந்த ஆண்டின் ஐபிஎல் ன் 13வது சீசன் கொரோனா நோய்த் தொற்றால் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து போட்டியை நடைபெறுவதற்கான அனுமதியை ஐபிஎல் ன் நிர்வாக குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டது. இந்த தொடரானது இந்தியாவில் மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெறும் ஆனால் கொரோனா நோய்த் தொற்றால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .

இந்த சீசனின் முதல் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் முதல் ஆட்டத்தில் கடந்த ஆண்டில் தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின.இந்தப் போட்டியை சுமார் 20 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் வெர்சன்களிலும், ஹாட் ஸ்டார் ஆப் மூலமாகவும் 20 கோடி பேர் பார்த்துள்ளனர்.

More News >>