கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் மீண்டும் கவலைக்கிடம்..

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி.பால சுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து வெண்டிலேட்டர், எக்மோ சிகிச்சை அளித்தனர். அவர் உடல்நிலை குணம் அடைய வேண்டும் என்று திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் வெளிநாட்டு மருத்துவர் களிடம் ஆலோசனை பெற்று இங்குள்ள டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரது உடல்நிலையில் முனேற்றம் ஏற்பட்டது. தொடர் சிகிச்சையில் எஸ்பிபி சுய நினைவு திரும்பி கிரிக்கெட் மற்றும் பாடல்கள் ரசிப்பதாக மகன் சரண் தெரிவித்தார்.

தினமும் எஸ்பி சரண் வெளியிட்ட வீடியோவில் தந்தை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அவருக்கு கொரோனா தொற்று குணம் ஆனது என்றும் தெரிவித்தார். ஆனாலும் நுரையீரலில் இன்னும் முன்னேற்றாம் ஏற்பட வேண்டி உள்ளது. அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் சிகிச்சை எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். ஆனால் படுக்கை யிலிருந்து எழுந்து 20 நிமிடம் உடகார்ந் தார், அவரே சாப்பிட தொடங்கினார் என்ற மகிழ்ச்சி தகவல்களும் கூறி வந்தார். இந்நிலையில் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எஸ்பி பி உடல்நிலை திடீர் கவலைக்கிடமாக இருப் தாக தெரிவிக்கப்பட்டுள்ளது திரையுலகினரையும், குடும்பத்தினர். ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் அழ்த்தி இருக்கிறது.வெண்டிலேட்டர் எக்மோ சிகிச்சை அளித்தும் அவரது நுரையீரல் சரிவர இயங்கவில்லை எனவே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது.எஸ்பிபி உடல்நிலைபற்றி அறிந்து மருத்துவமனைக்கு கமல் விரைந்து சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரம ணியம் அவர்களை அவரது நெருங்கிய நண்பரான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் நலம் விசாரிக்க எம்ஜிஎம் ஹாஸ்பிடல் நேரில் சென்றார்.

More News >>