ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் தலை துண்டித்து கொலை

நாமக்கல் அருகே நேற்றிரவு ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (46). இவர், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளராகவும், வெட்டுக்காடு தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்துவந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் சுரேஷ் வெட்டுகா பேருந்து நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலை துண்டாகி சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் பலகோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>